|
கேரளம் மாநிலத்தில் கொல்லம் ஜில்லாவில் கருநாகப்பள்ளி ஊரில் காரூர்கடவூ என்ற சிறுகிராமத்தில்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரம்மஹம்ச சேவாஷ்ரமம் உள்ளது அதில் பிரம்மச்சாரியாகவும், சன்னியாசியாகவும்,
நித்தியமுக்தனாகவும் இன்றும் நிர்வாகம் நடத்திவருபவர்தான் என் ஆன்மீக குரு பிரம்மரிஷி பாஸ்கரானந்த சுவாமிகள்,
அவரின் பாதகமலங்களில் இந்த இணயதளத்தை சம்பூர்ணமாக சமர்பிக்கின்றேன்.
மனிதனுடைய பார்வையிலிருந்து அவனுடைய எதிர்காலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
நாளைக்கு என்ன நடக்குமென்று எவருக்கும் தெரியாது. அதே சமையம் ஓவ்வொறு மனிதனும் தன்னுடைய
எதிர்காலம் எப்படி இருக்குமெனத் தெரிந்து கொள்ள ஆசைபடுவது இயல்பு. அதை தவிர அன்றாட வாழ்க்கையில்
மனிதன் பலவிதமான கஷ்டங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகிறான், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க
வேண்டியவனாக அவன் இருக்கிறான் தன்னுடைய கஷ்டங்களுக்கு எப்போது விடிவுஏற்படும், என்பதை தெரிந்து
கொள்ள ஜோதிடர்களை நாடிச் செல்கிறான். இந்த தருணத்தை எதிர்பார்த்து அவர்களை எமாற்றுவது ஜீவகாரூண்ணியம்
அல்ல, இது அடைக்கலம் வந்தவனை கழுத்தை அறுப்பதற்குசமம், நானும் ஓரு ஜோதிடர் தான் இருந்தாலும் நான்
குருமொழி தவறவில்லை.
பாரப்பா பலவாறாய் சக்கரம்பூட்டி
பணம் பறிக்கும் வித்தையது, பாரில்பாரு
கூறப்பா உன்மனதை திடபடுத்தி உத்தமனை
ஊள்வினையே எடுத்துசெப்பு.
இதுதான் அந்த குருமொழி.
|